தற்போது இந்த கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில், பழைய பேரூராட்சி கட்டிடம் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குப்பை அள்ளும் 3 சக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் இந்த பழைய கட்டிடம் தற்போது பிளிச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ளது. எனவே பழைய பேரூராட்சி பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஆரணியில் சேதமடைந்த பேரூராட்சி அலுவலகம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.