பனை விதை நடும் விழா

வாழப்பாடி, நவ.18: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பாப்பநாயக்கன்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில், பனை விதை நடும் விழா, கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வரதராஜசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராமன், வடக்குநாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தெற்குநாடு ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சிவராமன், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி மாது, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயமுருகன், அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், பழகன், கோபிநாத், வனக்குழு தலைவர் கார்த்தி, இளைஞரணி ரகுவரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பனை விதை நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: