இதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் கூறிய நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தி விரைவில் அரசாணை வெளியிடக்கோரியும், அரசாணை எண்.149ஐ நீக்கக் கோரியும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற 23ம் தேதி (வியாழக்கிழமை) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
The post இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 23ம் தேதி உண்ணாவிரதம்: நலச்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.