இந்நிலையில், வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட நடிகை விஜயசாந்தி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நட்சத்திர பேச்சாளருக்கான பட்டியலில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்த விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதனை காங்கிரஸ் கட்சியினரும் உறுதிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகை விஜயசாந்தி சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் கொடியை போர்த்தி கட்சியில் இணைத்து கொண்டார். அப்போது, தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளர் வேணுகோபால், மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பட்டி விக்ரமார்கா மற்றும் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.
The post பாஜக மீது கடும் அதிருப்தி காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி appeared first on Dinakaran.