இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கண்மாய்கள், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் தாக்கி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றிக்கு ரூ.80 முதல் ரூ.90 வரை வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கின்றனர். இருப்பினும் வெங்காயத்தில் அழுகல் நோய் காரணமாக உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
The post தொடர் மழையால் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் பாதிப்பு: உரிய மகசூல் கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.