கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட ஓட்டல் மேலாளர்களுக்கு பரிசுத்தொகை காசோலைகளை அமைச்சர் வழங்கினார். பிறகு, அவர் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு சவாரி மேற்கொள்ள படகு குழாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்களுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கி அவர்களுடைய முதலாவது விருப்பமான தேர்வாக ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் அமுதகம் உணவகங்களை உருவாக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சுற்றுலா துறை செயலாளர் மணிவாசன், சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் காகர்லா உஷா, மாவட்ட வருவாய் அலுவலர் கமலா உள்பட சுற்றுலாத்துறை அதிகாரிகள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளின் விருப்ப தேர்வாக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.