தெரு விலங்குகள் அல்லது நாய்கள் கடித்தால் அதற்கு அரசாங்கம் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 193 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன். தனி நபர்களின் நாய் கடித்தால் அவர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. தகுந்த ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகள் நான்கு மாத காலத்திற்குள் இந்த இழப்பீடு கமிட்டிகளால் நிறைவேற்றப்படும். இழப்பீடு செலுத்துவதற்கு முதன்மையான பொறுப்பை மாநில அரசு ஏற்க வேண்டும்.
பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுகான இழப்பீட்டை தீர்மானிப்பதற்காக, அந்தந்த மாவட்ட அளவில் துணை ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்க வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.
The post ஒவ்வொரு நாய் கடி அடையாளத்திற்கும் ரூ.10,000 இழப்பீடு: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.