கடந்த காலங்களில் சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சுரங்கப் பாதைகள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும். ஆனால் இன்றும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் எந்த சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் மழையால் சரிந்த 12 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில் 31 இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்தது.திமுக அரசு பொறுப்பேற்றதும் மழை பாதிப்புகளை தடுக்க ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தியதால் நேற்று கனமழை பெய்த போதும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post கொட்டித் தீர்த்த கனமழை.. சென்னையில் தேங்காத மழைநீர்.. சாதித்து காட்டிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு!! appeared first on Dinakaran.