பல்வேறு கிராமங்களை சேர்ந்த பலர் சென்னை செல்ல மானாம்பதி வழியாக திருப்போரூர் வந்து அங்கிருந்து மாநகர பேருந்து மூலம் பயணிக்கின்றனர். இவர்கள் ஆட்டோ, பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வரும்போது சாலை பள்ளங்களில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இரவு நேரங்களில் சாலை பள்ளங்களில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இதுமட்டுமின்றி திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் வரையுள்ள வனப்பகுதியில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இவை வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. சிறுதாவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுநலன் கருதி அவ்வப்போது உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் மண்கொட்டப்பட்டாலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி இந்த சாலை உள்ளிட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளுக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலைப்பணிகளுக்கு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மேற்கண்ட சாலையின் ஒரு பகுதியான திருப்போரூர்-திருக்கழுக்குன்றம் இடையே புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
The post குண்டும் குழியுமாகி சகதியான திருப்போரூர் – திருக்கழுக்குன்றம் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.