இந்த இடத்தை கடந்த 2018 ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்ஐடிஇஎஸ் எனும் இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து அக்குழுவின் பரிந்துரைப்படி 2018 செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக மண் மற்றும் கல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நாக்பூரில் உள்ள மத்திய மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் 2ம் கட்டமாக கடந்த 2019 நவம்பர் மாதம் மீண்டும் கல் மற்றும் மண் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டு மத்திய மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மண் பரிசோதனை துவங்கி நடந்து வருகிறது.
The post எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் 3வது முறையாக மண் பரிசோதனை appeared first on Dinakaran.