மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை: டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- டாஸ்மாக் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தீபாவளி நேரத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலோ, விற்பனையை அதிகரிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

 

The post மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: