இதுகுறித்து அந்த மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக வந்த பெற்றோர், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதனிடையே தன் மகன் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர் ராகிங் சட்ட பிரிவு, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post ராகிங் கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது: கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை appeared first on Dinakaran.