இப்பூங்காவை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இம்முறை மழை சற்று குறைந்த நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் அதிகமாக காணப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான மலர் செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்து வருகின்றன. அழுகி உதிரும் மலர்களை அவ்வப்போது அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பூங்காவில் மலர்கள் குறைந்தே காணப்படுகிறது.
The post அழுகிய ரோஜா மலர்களை அகற்றும் பணி துவக்கம் appeared first on Dinakaran.
