பகுஜன் சமாஜ் கட்சியில் 150 புதிய உறுப்பினர்கள் இணையும் விழா: மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஹரி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பகுஜன் என்.பிரேம், பொதுச் செயலாளர் புங்கத்தூர் டி.தேவா, நிர்வாகிகள் அம்பேத் ஆனந்த், ஜெய்பீம் செல்வம், தொகுதி தலைவர் சேலை சுரேஷ், சரண், கர்ணன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் சஞ்சய், தவிக்னேஷ், சுரேஷ் பாலாஜி, விஜய், சஞ்சய் குமார், கார்த்திகேயன், சார்ஜன், கார்த்திக், பிரேம், விஜய்சாரதி, கௌதம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பகுஜன் சமாஜ் கட்சியில் 150 புதிய உறுப்பினர்கள் இணையும் விழா: மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: