இப்போது மத்திய பிரதேசத்தில் அவர்கள் வெற்றி பெற துடிப்பதற்கு காரணம், மக்களவை தேர்தல் நிதிக்காக மபியை தனது ஏடிஎம் ஆக்க காங்கிரஸ் விரும்புகிறது. இங்கு அரசின் பணத்தை கொள்ளையடிக்க துடிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.மிசோரமில் வீடியோ பிரச்சாரம்: மிசோரம் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி நேற்றுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. மற்ற 4 மாநிலத்திலும் நேரில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மிசோரம் மாநிலத்தை மட்டும் தவிர்த்தார். கடைசி நாளான நேற்று நேரில் வராமல் வீடியோ மூலம் அவர் பிரசாரம் செய்தார்.
The post மக்களவை தேர்தல் நிதிக்காக மபியை ஏடிஎம் ஆக்க காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.