தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் நிலத்தை காலீஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்காக விற்று பாரத் ராஷ்ட்ரிய சமிதி ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம், மீண்டும் மக்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.இது தொடர்பாக பேசிய அவர், “உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அடங்கி உள்ள தெலுங்கானா மாநிலம் குறித்து மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.உங்கள் முதல்வர் பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளார். அதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த தொகையை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பிரதமர் மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல.ஒரு வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்றுவேன்,”என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2,500 உதவித் தொகையும் எரிபொருள் சிலிண்டருக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
The post தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கொள்ளையடித்த ரூ.1 லட்சம் கோடி பணம் திரும்ப மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் : ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.