₹4.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், நவ. 2: திருச்செங்கோடு வேளாண்ைம உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 250 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,169 முதல் ₹7,399 வரையும், பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,009 முதல் ₹7,150 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,099 முதல் ₹4,970 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 250 மூட்ைட பருத்தி ₹4.50 லட்சத்துக்கு ஏலம் போனது என சங்க மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹4.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: