அதன்படி தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தனி நபர்களோ அமைப்புகளோ சேர்ந்து உருவாக்கும் அமைப்புகளை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை அங்கீகரிப்பதும் இல்லை, ஒழுங்குபடுத்துவதும் என்று ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது. ஜார்ஜ் ஜோசப் என்பவருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நடைபெற்ற வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
The post I.N.D.I.A. கூட்டணிக்கு எதிரான வழக்கு… அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் வேலை இல்லை : தேர்தல் ஆணையம் பதில் appeared first on Dinakaran.