இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி, மறு மார்கமாக திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஒட்டி வந்த டிரைவர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மதுராந்தகம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்து விபத்து: காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் appeared first on Dinakaran.