கோயில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு

சேலம், அக்.29: சேலம் மாமாங்கம் அருகே உள்ள காளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்த மீனாட்சி (76) என்பவர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 3.5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச்சென்றுள்ளார். அதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்கரையைச் சேர்ந்த அத்தாயியம்மாள்(80) அணிந்திருந்த 4 பவுன் செயினையும் மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோயில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: