தொடர்ந்து மாவட்ட தலைவர் கலியவரதன் மைக்கில், காலியாக உள்ள நாற்காலியில் வந்து உட்காருங்கள், உங்கள் காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன் என்று அழாதகுறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார். நேரம் ஆகவே காரிலிருந்து நடிகை நமீதா மேடைக்கு வந்தார். கூட்டம் சேராததால் 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்து சென்றுவிட்டார். பாஜ ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் சேராதென்று நடிகையை அழைத்தும் பயனில்லை. கடைசியில் சாலையோரம் சென்றவர்களும், நமீதாவை பார்க்க வந்த சிலபேரும் தான் பங்கேற்றதாக அக்கட்சியினர் புலம்பி சென்றனர். காலியாக இருந்த நாற்காலியை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை, மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் தடுத்து தகராறும் செய்தனர்.
The post விழுப்புரத்தில் பாஜ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை நமீதாவை அழைத்தும் காலியாக கிடந்த நாற்காலிகள்: காலைபிடிக்கிறேன் வாருங்கள் என மாவட்ட தலைவர் கெஞ்சல் appeared first on Dinakaran.