ஓசூர்: ஓசூர் அருகே போலீசை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாம்தார் உசேன்(34), மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஓசூர் பகுதியிலும் நாம்தார் உசேன் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக வழக்குகள் உள்ளன. ஓசூர் ஹட்கோ போலீசார் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று நாம்தார் உசேனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிடித்து வந்துள்ளனர்.
The post போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: ஓசூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.