தொடர்ந்து அவரை கைது செய்தது. இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்குக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக்கின் வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் அரிசியை, சட்டவிரோதமாக விற்று மோசடி செய்துள்ளனர். அரிசி ஆலை அதிபர் ரஹ்மானுக்கு கொல்கத்தா, பெங்களூருவில் ஓட்டல்கள் மற்றும் பார்கள் உள்ளன. வெளிநாட்டு கார்களை வாங்கியுள்ளார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோதிப்ரியா மாலிக்கும் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று கூறினர். மிகப்பெரிய சதித்திட்டம் அமலாக்கத்துறையால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் கூறுகையில், ‘மிகப் பெரிய சதித்திட்டத்தில் பலியாகிவிட்டேன்’ என்று கூறினார்.
The post ரேஷன் அரிசி ஊழல் வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் கைது: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.