நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் நேற்று 26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் காவல்துறையினர் ரவுடி கருக்கா வினோத்தை ஆஜர்படுத்த உள்ளனர்.
The post ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! appeared first on Dinakaran.