வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் இருவர் கைது

ஏழாயிரம்பண்ணை, அக்.27: வெம்பக்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆலை மற்றும் கடைகளில் பட்டாசு தயாரித்து விற்பனைக்காக வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வெம்பக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெம்பக்கோட்டை அருகே மடத்தப்பட்டி பகுதியில் உள்ள கணேஷ் மற்றும் விஜயலட்சுமி பட்டாசு கடையை சோதனை செய்தனர். அதில் எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் சரவெடி மற்றும் வாணவெடி உள்ளிட்ட சுமார் 5000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு மற்றும் வெடிகளை விஜயகரிசல்குளம் மற்றும் இறவார்பட்டி பகுதியை சேர்ந்த குருவையா(36), ராமர்(42) ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: