எலக்ட்ரிக் குடோனில் தீவிபத்து

வேளச்சேரி: மேடவாக்கம், விமலா நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (57). இவரது மனைவி பத்மபிரியா (50). இவர்கள் வீட்டின் தரை தளத்தில் எலக்ட்ரிக் மற்றும் துணிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த 2 கடைகளுக்கு தேவையான குடோன் முதல் தளத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த குடோனில் நேற்று முன்தினம் காலை தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவில கொழுந்துவிட்டு எரிந்தது. தகலவறிந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் மேடவாக்கம், வேளச்சேரி, கிண்டி, தாம்பரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதன்காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனுக்குள் வைத்திருந்த எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் துணிமணிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனுக்குள் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

The post எலக்ட்ரிக் குடோனில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: