ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தனித்து நிற்கவும் தயார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; நாங்கள் யாரையும் போய் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி. 2 ஆண்டுகளாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருவதால் இந்தாண்டு செல்கிறார்.
அமமுக ஒபிஎஸ் இடையேயான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக இருக்கின்றது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக – பா.ஜ.ககூட்டணி பிரித்தது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர் இப்போது பிரிந்து இருக்கின்றனர், அப்படித்தான் பார்க்க முடியும் என தெரிவித்தார்.
The post துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.