மக்களுடன்தான் கூட்டணி அதிமுகவினர் விமர்சிப்பது குறித்து கவலைப்பட்டதில்லை: அண்ணாமலை பேட்டி

கோபி: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கோபி தொகுதியில் நேற்று முன்தினம் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டி: அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து என்னை விமர்சிப்பது குறித்து நான் என்றும் கவலைப்பட்டதில்லை. என்னுடைய கருத்துகளை ஆக்ரோஷமாக, உரக்கமாக தொடர்ந்து பேசி வருகிறேன். எப்போதும் முன் வைத்த காலை பின் வைத்தது இல்லை. தமிழ்நாட்டில் இன்று பாஜதான் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜ உறுதியாக வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர வேண்டும் ஆக்ரோஷமாக வேகமாக பாஜ வளர வேண்டும் என்று நினைக்கிறேன். 2024ல் பெரிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என ஒரு மாநில தலைவராக எனக்கு ஆசை இருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மக்களோடுதான் கூட்டணி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

The post மக்களுடன்தான் கூட்டணி அதிமுகவினர் விமர்சிப்பது குறித்து கவலைப்பட்டதில்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: