அதேபோன்று எடப்பாடி பழனிசாமி 1,000 சதவீதம் மகிழ்ச்சியாக உள்ளார். 10 பேர் இருக்கிற பாஜவினர் அடுத்த முதல்வர் அண்ணாமலை என கூறுகின்றனர். பாஜவுடன் கூட்டணி வைத்தால் தான் தமிழகத்தில் வெற்றி கிடைக்கும் என்ற சூழ்நிலை எங்களுக்கு கிடையாது. அவர்களால் அதிமுக வளரவில்லை, அதிமுகவினால் தான் பாஜ வளர்கிறது. அதனால் தான் கூட்டணிக்கு அழைக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு துரோகம் செய்யக்கூடிய பாஜவுடன் இப்போது மட்டுமல்ல. அதிமுக எப்போதும் இனி கூட்டணி வைத்து கொள்ளாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post பாஜ என்ற சைத்தான் வெளியேறியதில் மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல் appeared first on Dinakaran.
