காசா மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு பிரச்னைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது. காசாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முன்வர வேண்டிய நேரம் இது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.