கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே துணிகரம்

வந்தவாசி, அக்.13: வந்தவாசி அருகே அம்மன் கோயில் பூட்டு உடைத்து அம்மன் தங்கத்தாலியை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக இருப்பவர் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி. இவர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு வழக்கம்போல் கோயிலை பூட்டி விட்டு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை பூஜை செய்வதற்காக கோயிலுக்கு வந்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பூசாரி கணபதி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் ₹25 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, பெட்டகத்தில் இருந்த 2 பித்தளை குத்து விளக்குகள் ஆகியன திருட்டுபோனது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் இரவு கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால், கோயிலில் இருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் சுமார் ₹25 ஆயிரம் காணிக்கை தப்பியது. இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: