சென்னை : சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் டி.சி. ஜெயினை, சிபிஐயின் சிறப்பு இயக்குநராக நியமனம் செய்ய ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. பொறுப்பேற்ற தேதியிலிருந்து (அக்டோபர் 31, 2023) ஓய்வுபெறும் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.