புள்ளி வேட்டையை துவக்குமா ஆஸ்திரேலியா?: இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்

லக்னோ: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோத உள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. லக்னோ, அடல் பிஹரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் வெல்ல வேண்டுமென்ற துடிப்புடன் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடனான முதல் போட்டியில் தோற்றதால் புள்ளி கணக்கை துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் போட்டியிலே 428 ரன் குவிப்பு. 3 பேர் சதம், அதிவேக சதம் என ஏகப்பட்ட சாதனைகளோடு 2 புள்ளிகள் எடுத்து, நல்ல ரன் ரேட்டுடன் உள்ளது தென் ஆப்ரிக்கா. இந்த பார்ம் தொடர் முழுவதும் தொடர வேண்டுமென விரும்புவுதாக அந்த அணியின் கேப்டன் பவுமா தெரிவிக்கிறார். இந்த போட்டியில் வென்றால் புள்ளிகள் பட்டியலில் தென் ஆப்ரிக்காக முதலிடத்தை பிடிக்கும். இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ளதால் ரசிகர்கள் அனல் பறக்கும் ஆட்டத்தை இன்று பார்க்கலாம்.

The post புள்ளி வேட்டையை துவக்குமா ஆஸ்திரேலியா?: இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: