அவர்கள் மீது சந்தேகம் அதிகரிக்கவே, போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் வாகனத்தில் 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மேலும் நடத்திய விசாரணையில், குட்காவை கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த மோகன் (52), சாய்சரண் (27) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
The post ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 20 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.