சென்னை: பாஜக பட்டியல் அணி மாநில துணை தலைவர் பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக செயல்பாடுகள் பிடிக்காததால், கட்சியில் இருந்து விலகுவதாக பாண்டியன் அறிவித்தார். பாஜக மாநில தலைவருக்கு பாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். ஜாதிய பாகுபாடும், நவீன தீண்டாமையும் பாஜகவில் இருப்பதாக பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.