போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ராசிபுரம், அக்.10: ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில், 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் உட்கோட்ட காவல்துறை சார்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்தும், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவ -மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: