மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.140 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே வடக்கு சிக்கிம் மலைப்பகுதியில் ஒரு வாரமாக சிக்கி தவித்த 56 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேடான மலைப்பகுதியில் குழுவாக தங்கி இருந்ததாகவும் வெளியேற வழியில்லாததால் கடும் சிரமங்களை சந்தித்ததாகவும் மீட்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சுமார் 1,700 சுற்றுலா பயணிகள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளைப்பாதிப்பால் சேறு நிறைந்த ஏராளமான வீடுகள் மண்குவியல்களாக காட்சி அளிக்கின்றன.
The post சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு.. 140 பேர் மாயம்.. ஒரு வாரத்திற்கு பிறகு 56 பேர் உயிருடன் மீட்பு!! appeared first on Dinakaran.
