2016 செப்டம்பர் 1ம் தேதி வீட்டில் தன் மகன்களுடன் சுக்ஜித் சிங் தூங்கி கொண்டிருந்தபோது, ராமன்தீப் கவுர் தன் நண்பர் குர்தீப் சிங்குடன் சேர்ந்து, கூர்மையான ஆயுதங்களால் சுக்ஜித் சிங்கை தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் பிரிட்டன் பெண் ராமன்தீப் கவுருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவரது நண்பர் குர்தீப் சிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post இந்திய கணவரை கொன்ற பிரிட்டன் பெண்ணுக்கு மரண தண்டனை: உபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.