இது தொடர்பாக கமோடோர் லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் தகவல் கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை அளித்த பதிலில்,தற்போதைய தகவல் ஆணையர்களான ஹீராலால் சமாரியா,சரோஜ் புன்ஹானி,உதய் மகுர்கர் உட்பட 76 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது,பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்கள். ஆனால், அதுபோல் ஒன்றிய தகவல் ஆணையத்தில் தற்காலிக தலைமை ஆணையரை நியமிப்பதற்கு ஆர்டிஐ சட்டத்தில் இடமில்லை என லோகேஷ் பத்ரா தெரிவித்தார்.
The post ஒன்றிய தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 76 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.