தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறேன்: நடிகர் பவன்கல்யாண் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நேற்று காலை முதல் தகவல் பரவியது. இதுதொடர்பாக நேற்றிரவு கிருஷ்ணா மாவட்டம் கைக்கலூர் தொகுதிக்கு உட்பட்ட முடினப்பள்ளியில் நடந்த வாராஹி ரோடு ஷோ கூட்டத்தில் பவன்கல்யாண் பேசுகையில், `ஜனசேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நான் கூறியது போன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பாஜக கூட்டணியில் இருந்து நான் விலக முடிவு செய்தால் அதனை நானே அறிவிப்பேன். மறைமுகமாக எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனசேனா கட்சி நீடிக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் மீது எனக்கு அதிக நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. பாஜக ஆசியுடன் ஜனசேனா-தெலுங்கு தேசம் கட்சி அரசு ஆந்திராவில் அமையும். எனது கட்சி பலம் இழந்துவிட்டதாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறேன்: நடிகர் பவன்கல்யாண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: