இதுகுறித்து மருத்துவமனை தலைமை டாக்டர் கூறுகையில், ‘‘ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளது. 70 முதல் 80 கிமீட்டர் சுற்றளவுக்கு இங்கு வேறெந்த பெரிய மருத்துவமனையும் இல்லாததால் பெரும்பாலானோர் இங்குதான் சிகிச்சை வருவார்கள். மருந்து பற்றாக்குறையை ஈடுசெய்ய அருகிலுள்ள மருந்து ஏஜென்சிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அது தேவையை ஈடு செய்வதாக அமையவில்லை என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
The post மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் பலி appeared first on Dinakaran.