155வது பிறந்தநாள் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். இதே போல முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நமது வாழ்க்கை பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. காந்தி ஏற்படுத்திய தாக்கம் உலகளாவியது. அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் எப்போதும் உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் ஒற்றுமை, நல்லிணக்கத்தை வளர்க்க இளைஞர்கள் ஒவ்வொருவரும் காந்தியின் ஏஜென்ட்களாக செயல்பட்டு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

The post 155வது பிறந்தநாள் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: