திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் காணிக்கையாக வந்த 535 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய அனுமதி: கேரளா உயர்நீதிமன்றம்

கேரளா: திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் காணிக்கையாக வந்த 535 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய அனுமதி அளித்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வங்கியில் தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தில் முதலீடு செய்ய கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 535 கிலோ கோயில் தங்கத்தை 5 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டில் கிடைக்கும் வட்டியை தேவசம் போர்டின் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியுடன் வட்டியைப் பயன்படுத்தலாம் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் காணிக்கையாக வந்த 535 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய அனுமதி: கேரளா உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: