இந்த விமானம் இரவு 8 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு செல்லும்.இந்த டிவிட்டர் பதிவு, அந்த விமான நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் தான் வந்துள்ளது. அந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது இந்த மிரட்டல் பதிவை போட்டிருக்கலாம் அல்லது இது வெறும் புரளியாக தான் இருக்கும் என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்த டிவிட்டர் பதிவில் எந்த விமானம், எந்த விமான நிலையத்தில் இருந்து எங்கு செல்லும் விமானம், எந்த நேரம் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இது அதிகாரிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு குண்டு மிரட்டல்: அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.
