தண்ணீர் திறக்க முடியாது என பிடிவாதம்!: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம்..!!

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர். காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் கர்நாடகா நீர்திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனால் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி. நீர் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்திற்கு 18நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. காவிரி ஆணையம் 3,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்த நிலையில் கர்நாடகா அரசு திறந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தண்ணீர் திறக்க முடியாது என பிடிவாதம்!: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: