இந்நிலையில், அவர், கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு இடது கண்ணில் நீர்ப்பை அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர் ஹேமலதா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் விக்னேஷ் குழுவினர் மற்றும் மயக்கவியல் குழுவினர், கிளவர்தாசுக்கு கடந்த 20ம் தேதி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இதன் மூலம் நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கூறிய கிளவர்தாஸ் தனக்கு, சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்து, நேற்று வீடு திரும்பினார்.
The post பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ராணுவ வீரருக்கு கண் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.
