இதனால் விஜயா தனது மகனுடன் பூங்காநகர் பகுதியில் வசித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த 3 மாதமாக காக்களூர் பூஞ்சோலை தெருவில் ராஜேந்திரன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த 27ம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் சந்திரன் என்பவர், ராஜேந்திரன் தங்கியிருந்த வீட்டு வழியாக சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து சந்திரன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது ராஜேந்திரன் வீட்டின் மேற்கூறையில் தூக்கிட்டு பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயாவுக்கு வீட்டின் உரிமையாளர் சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அங்கு விரைந்து வந்த விஜயா தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மனைவி, மகனை பிரிந்த மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post மனைவி, மகனை பிரிந்து வாழ்ந்ததால் விரக்தி தூக்கிட்டு முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.