பொதுத்துறையில் 10 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 50,000 பேருக்கு நியமன கடிதங்களை கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்குவதாக பாஜ அரசு கூறுகிறது. புதிய நியமனங்களாக அரசு கூறினாலும், அதில் பெரும்பாலானவை வெறும் பதவி உயர்வுகள் என்று தி டெலிகிராப் வெளியிட்ட ஆர்டிஐ பதிவு காட்டுகிறது. மோடி அரசு இளைஞர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நசுக்கியுள்ளது.
இதன் விளைவு, 30 வயதுக்க உட்பட இளைஞர்களின் தற்கொலை விகிதம் 2016 முதல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2021ல் ஒரு லட்சம் பேரில் 4.9 பேர் தற்கொலை செய்யும் நிலையை எட்டியுள்ளது. இது 25 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையாகும். ஆனால் இந்த பேரழிவு நிலையை எதிர்கொள்வதற்கு பதிலாக இளைஞர்களிடையே தற்கொலை விகிதத்தை மறைக்க 2022ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை திரிப்பது பாஜ அரசின் அடுத்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
The post வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களின் தற்கொலைக்கு வழிவகுக்கும் ஒன்றிய பாஜ அரசு: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
