2வது தவணையாக முன்கூட்டியே ரூ.1,600 கோடி கடனை செலுத்துகிறார் அதானி

புதுடெல்லி: அதானி குழுமம் 2வது தவணையாக முன்கூட்டியே ₹1600 கோடி கடனை திருப்பி செலுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடி செய்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அதன் மூலம் அதானி குழும பங்குகள் கடும் சரிவை கண்டன.

இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, அதானி குழுமத்தின் துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் அடுத்த ஆண்டு செலுத்த வேண்டிய முக்கிய கடன் பத்திரங்களை முன்கூட்டியே செலுத்த கடந்த மே மாதம் முடிவு செய்தது. முதல் தவணையாக ₹1066 கோடி கடன் பத்திரங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்திய நிலையில், 2வது தவணையாக ₹1,600 கோடியை முன்கூட்டியே செலுத்துவதாக நேற்று அறிவித்துள்ளது.

The post 2வது தவணையாக முன்கூட்டியே ரூ.1,600 கோடி கடனை செலுத்துகிறார் அதானி appeared first on Dinakaran.

Related Stories: