மதுரை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டம் அண்ணா நகர், செல்லூர், பீ.பீ.குளம், நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர், மருனூத்து உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்கிறது.
கொடைக்கானல், நாயுடுபுரம், மூஞ்சிக்கல், கலையரங்கம் பகுதி, சென்பகனூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுபட்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை, செவிலிமேடு, சிறு காவேரிப்பாக்கம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என என வானிலை மையம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
The post மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.